election2021

img

பழனிசாமி என்று சொன்னாலே....

பழனிசாமி என்று சொன்னாலே கொடநாடுதான் நினைவுக்கு வரும்.. பழனிசாமி என்று சொன்னாலே கொள்ளைதான் நினைவுக்கு வரும்.. பழனிசாமி என்று சொன்னாலே சாத்தான்குளம் படுகொலைதான் நினைவுக்கு வரும்.. பழனிசாமி என்று 
சொன்னாலே தூத்துக்குடியில் 13 பேரை காக்கை குருவியை சுட்டுக் கொல்வது போல சுட்டுக் கொன்றதுதான் நினைவுக்கு வரும்.. பழனிசாமி என்று சொன்னாலே பொள்ளாச்சிதான் நினைவுக்கு வரும்.. பழனிசாமி என்று சொன்னாலே நீட் தேர்வினால் பலர் இறந்ததுதான் நினைவுக்குவரும்.

இப்போது பழனிசாமி என்றால் பாஜகவின் கிளைக்கழகமாக அ.தி.மு.க. மாறிவிட்டது என்பதுதான் நினைவுக்குவரும்.பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறப்போவதில்லை. ஆனால் அ.தி.மு.க.வும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்று விடக்கூடாது. அவ்வாறு ஒரு இடத்தில் வெற்றி பெற்றாலும்அவர் அ.தி.மு.க. உறுப்பினராக இருக்க மாட்டார், பாஜக உறுப்பினராக மாறி விடுவார்.அதற்கு உதாரணம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்றோம். ஒரே ஒரு இடத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அவர் ஓ.பி.எஸ். மகன். அவர் அ.தி.மு.க. எம்.பி.யாக வெற்றி பெற்று பாஜக எம்.பி.யாக இருக்கிறார். அவருடைய லெட்டர் பேடில் மோடியின் படம் தான் இருக்கிறது.எனவே அவர்கள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்று விடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் தொடக்கத்தில் 200க்கும் குறைவில்லாத இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னேன்.

ஆனால் இப்போது பல நாட்களாகத் தமிழகம் முழுவதும்சுற்றி வருகிறேன். அதை வைத்து சொல்கிறேன், 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம்.அதிமுக கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையிலிருந்து விரட்டுவதற்கு நீங்கள் தயாராக வேண்டும். இந்த கிரிமினல் கேபினட்டை சிறைக்கு அனுப்ப தயாராக இருக்க  வேண்டும்.அதற்கான தேர்தல்தான் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் தேர்தல் என்பதை மறந்துவிடக்கூடாது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டை, கொளத்தூர் தொகுதிகளில் பிரச்சாரத்தின்போது ஆற்றிய உரையிலிருந்து...

;