election2021

img

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி...

கோயில்களை காப்பாற்றுவோம் என கிளம்பி இருக்கிறார் ஒரு சாமியார்.  அவருடைய புரட்சி போராட்டம் வெல்லட்டும். அதற்கு முன் சில டவுட் இருக்கிறது. 

இதுவரை எத்தனை சிதிலமடைந்த கோயில்களுக்கு இவர் உதவி செய்திருக்கிறார்... 

எத்தனை கோயில்களுக்கு பத்து ரூபாயாவது காணிக்கை கொடுத்திருப்பார்.

எத்தனைமுறை மற்ற கோயில் திருவிழாக்களில் கலந்துகொண்டு அல்லது முன்னின்று நடத்தி டொனேஷன் கொடுத்திருக்கிறார்.. 

சரி அவ்வளவு அக்கறை இருந்தால், பீலிங் இருந்தால், தன் ஆயிரம் கோடி சொத்துகளை விற்று பண்ண வேண்டாம் பாதியாவது விற்று கோயில்களை காப்பாற்றலாமே... 

சரி உங்களுக்கு ஒன்லி இன்கமிங்தான். காசு கொடுக்கிற பழக்கம் இல்லை. ஆறு வருஷமாக ஆட்சியில் இருக்கிறமோடியும் போன மாசம் வரை முதல்வராக இருந்த எடப்பாடியாரும் புஜுக்கு புஜுக்கு பண்ணுகிற அளவுக்குநண்பர்கள்தானே.. அவர்களிடம் ஏன் இத்தனை ஆண்டுகளில் ஒரு கோரிக்கை கூட வைக்கவில்லை...

நிஜமாகவே கோயில்களை காப்பாற்றுகிற நோக்கமுள்ள லட்சம் பேர் உழவாரப்பணி பண்ணிகிட்டிருக்கான் சத்தமில்லாம.. இவரு பல ஆயிரம் கோடி சொத்து வச்சுகிட்டு தேர்தல் டயத்துல சலசலப்பை உண்டாக்குவாராம். அறநிலைய துறையை கலைச்சிட்டு ஆர்எஸ்எஸ் கையில கோயிலை குடுத்துட்டுவாசல்ல கடைபோட பிளான் போல.. அம்பானிக்கும் அதானிக்கும் நாட்டை குடுத்த மாதிரி இவருக்கு கோயிலை குடுத்துட்டா பிஸினஸ் பிச்சிக்கும்ல.

(அதிஷா வினோத் பதிவிலிருந்து)

;