election2021

img

நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன்... வெற்றியை நீங்கள் பெற்றுத் தாருங்கள்...கவனம் சிதறிவிட வேண்டாம்; 234 தொகுதிகளிலும் வெல்வோம்: மு.க.ஸ்டாலின்....

சென்னை:
மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிப் பயணத்தை தடுத்து நிறுத்திட ஆளும் அதிமுக - பாஜக கூட்டணி மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடிப்போம் என்றும்,அந்த நடவடிக்கைகளால் கவனம்சிதறிவிடாமல், மக்கள் தரப்போகும் வெற்றியை சிந்தாமல் சிதறாமல் பெற்றுத் தாருங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக தோழர்களுக்கு கடிதம்வாயிலாக விடுத்துள்ள வேண்டுகோளில், “இதனைப் படிப்பதற்குக் கூட அவகாசமின்றி கடும் கோடை வெயிலில், பகல் - இரவு பாராது தி.மு.கழகக் கூட்டணியின் வெற்றிக்காக அயராது பணியாற்றிக் கொண்டிருக்கும் உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் நான் அறிவேன். உங்களில்ஒருவனான நானும் ஓய்வின்றிப் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.2021-ஆம் ஆண்டு பிறந்த போதே இது நமக்கான ஆண்டுஎன்று சொன்னேன். அந்த நம்பிக்கைவெற்றிகரமாக விளைந்திருப்பதைத் தேர்தல் களத்தில் காண முடிகிறது. தமிழகத்தை மீண்டும் சுயமரியாதை கொண்ட மாநிலமாக - தொழில் வளர்ச்சி உள்ள மாநிலமாக - வேலைவாய்ப்பு பெருகும்மாநிலமாக-அனைத்துத் துறைகளி லும் முதலிடம் பெறுகிற மாநிலமாகஆக்கிட வேண்டும் என்கிற எண்ணம் தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் உள்ளது. அந்த எண்ணம் நிறைவேறிட, உதயசூரியன் சின்னமும் தோழமைக் கட்சிகளின் சின்னமுமே உறுதுணையாக இருக்கும் என்பதால் 234 தொகுதிகளிலும் மக்களின் பேராதரவு கழகக் கூட்டணிக்கு உள்ளது.

மகத்தான இந்த வெற்றிப் பயணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என மத்திய - மாநில ஆளுங்கட்சிகளான பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பொய்ப் பிரச்சாரங்களை அரசாங்க பணத்தில் விளம்பரமாகக் கொடுத்தார்கள். தி.முக. மீது அவதூறுகளை அள்ளிவீசினார்கள். திசை திருப்பல்கள், இட்டுக்கட்டுதல், வெட்டி - ஒட்டுதல் எனப் பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்து பார்த்தனர். மக்களிடம் எதுவும் எடுபடவில்லை.அதன்பிறகு, முதலமைச்சரில் தொடங்கி பிரதமர் வரை பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுப் பரப்புரை செய்தார்கள். தி.மு.க.வின்வலிமை நாளுக்குநாள் கூடிக்கொண்டே இருப்பதைக் கள நிலவரமும், ஊடகங்களின் கணிப்புகளும் ஆட்சியாளர்களுக்குத் தெளிவாகக் காட்டிவிட்டது. அவர்களின் அத்தனை மோசடி அம்புகளும் முனை முறிந்தநிலையில், கடைசியாக ரெய்டு எனும் மிரட்டல்ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள்.

ஜனநாயகக் களத்தில் நேருக்கு நேர் நின்று - மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு வழியில்லாதவர்கள் - மக்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்திப்பவர்கள் - மிரட்டல் மூலம் கழகத்தை வீழ்த்திவிடலாம் என மனப்பால் குடிக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். 234 தொகுதிகளிலும் கலைஞரே வேட்பாளராக நிற்கிறார் என்பதை நிரூபித்திடும் வகையில், கழக உடன்பிறப்புகள் களப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். பெருகிவரும் மக்களின் ஆதரவை ஒருமுகப் படுத்துங்கள். அவற்றை ஒட்டுமொத்தமாக தி.மு.கழக கூட்டணிக்கு ஆதரவான வாக்கு களாக்கிடப் பாடுபடுங்கள். ஆளுந்தரப்பின் பொய் பரப்புரை - ரெய்டு நடவடிக்கைகள் - திசை திருப்பும்நடவடிக்கைகளால் உங்கள் கவனம் சிதறிவிட வேண்டாம் என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், “நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன். மக்கள் தரப் போகும் வெற்றியைச் சிந்தாமல் சிதறாமல் நீங்கள் பெற்றுத்தாருங்கள். 234 தொகுதிகளி லும் வெல்வோம். ஆதிக்கவாதிகளிட மிருந்தும் - அடிமைகளிடமிருந்தும் தமிழகத்தை மீட்போம்” என்றும் கூறியுள்ளார்.

;