திண்டுக்கல்:
பெண்களின் ஆரத்திதட்டுகளுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் இரா.விஸ்வநாதன் போட்டியிடுகிறார். திங்களன்று பிரச்சாரத்தை துவக்கியவிஸ்வநாதன் காட்டுவேலம்பட்டி சென்ற போது அவரை வரவேற்ற பெண்களுக்கு ஆரத்தி தட்டுகளில் பணப்பட்டுவாடா செய்த வீடியோகாட்சிகள் சமூக வலைத்ளத்தில் பரவி வைரல் ஆனது. இதனையடுத்து வீடியோபிரிவு தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரி மைக்கேல் ஆரோக்கியதாஸ் நத்தம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதனையடுத்து அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. (நநி)