election2021

img

முன்னாள் அதிமுக அமைச்சர் விஸ்வநாதன் வாக்குச்சேகரிப்பில் பணப்பட்டுவாடா .... வைரலான வீடியோ - காவல்துறையில் அதிகாரி புகார்.....

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம்சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்  முன்னாள் அதிமுக அமைச்சர்நத்தம் விஸ்வநாதன் வாக்குச்சேக ரிப்பின் போது ஆரத்தி தட்டுகளுக்குபணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி நத்தம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். 

நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் திங்களன்று இரவுதொகுதிக்குட்பட்ட காட்டுவேலம் பட்டியில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை வரவேற்ற பெண்களின் ஆரத்தி தட்டுகளுக்கு அவரது தொண்டர்கள் பணப்பட்டுவாடா செய்தனர்.இதுகுறித்த  வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து தேர்தல் வீடியோ கண்காணிப்புக்குழுத் தலைவர் மைக்கேல் ஆரோக்கியதாஸ் நத்தம் காவல்துறையிடம் புகார் அளித்து, வழக்கு பதிய வேண்டும் என்று  தெரிவித்துள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் கூறுகையில், பணம் வெற்றி பெறாது. அதிமுகவிடம் மக்கள் ஏமாறமாட்டார்கள். மே-2-ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நிகழும் என்று தெரிவித்தார்.

;