election2021

img

தமிழகத்தில் இன்று இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது... 

சென்னை
தமிழகத்தில் வரும் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அனைத்து கட்சிகளும் இன்று இரவு 7 மணியுடன் பிரசாரத்தை நிறுத்தி விட வேண்டும். அதன் பின்னர் இனி வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்கக் கூடாது. தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் இன்று இரவு 7 மணியுடன் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலையில் காவல்துறையினர் அனைத்து தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் சோதனை நடத்தி தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்களை  வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

;