election2021

img

திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடா? அதிமுக நிர்வாகியிடமிருந்து ரூ.26.24 லட்சம் பறிமுதல்... 

மதுரை
மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக நிர்வாகியிடமிருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.26.24 லட்சம் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தற்போது இதுகுறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாயின் பிரச்சார வியூகத்தை சமலைக்க முடியாமல் அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா பணப்பட்டுவாடா முயற்சியில் களமிறங்கியுள்ளாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.  

இதே போல சோழவந்தான் தொகுதியில் ஆரத்தி எடுக்க பணம் கொடுக்கப்பட்டதாக திமுக கட்சி சார்பில் வீடியோ ஆதாரத்துடன் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் சோழவந்தான் தொகுதியின் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

;