சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறவினர்வீட்டில் வருமானவரி சோதனை - திசைதிருப்பும் முயற்சியாகும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள் ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னமும் 3 நாட்களேஉள்ளன. பாஜக- அதிமுக கூட்டணி தோல்விபயத்தில் விரக்தியின் எல்லைக்கே சென்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது மருமகன் சபரீசன் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியுள்ளது. முற்றிலும் உள்நோக்கம் கொண்ட இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.மத்தியிலுள்ள மோடி அரசு வருமானவரித்துறை,அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை உள்ளிட்ட அனைத்து மத்தியஅரசு நிறுவனங்களையும் தன்னுடைய குறுகிய அரசியல் நலனுக்காகவே பயன்படுத்தி வருகிறது. மோடி அரசை விமர்சிப்பவர்கள் மீது வருமானவரித்துறையை ஏவிவிடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்உறவினர் வீடுகளில் நடத்தப்படும் வருமானவரி சோதனை மக்களுடைய கவனத்தை திசைதிருப்பவும், எதிர்க்கட்சிகளின் மீது களங்கம் கற்பிக்கவும் மட்டுமே நடத்தப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் திமுக தலைமையிலான அணியின் வெற்றியைத் தடுத்து விட முடியும் என்று மத்திய பாஜக அரசு கருதுமானால் அது பகல்கனவாகவே முடியும்.மத்திய ஆளுங்கட்சியான பாஜக-வின் துணையுடன் மாநில ஆளுங்கட்சியான அதிமுக தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பகிரங்கமாக பண விநியோகம் செய்கிறது. அரசு அதிகாரிகளே இதற்கு துணை போகும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ள மறுக்கிறது.திமுக தலைவரின் உறவினர் வீடுகளில்தேர்தல் காலத்தில் திட்டமிட்டு வருமானவரித்துறையை ஏவி விடுவது கண்டிக்கத் தக்கதாகும். இத்தகைய திசை திருப்பும் முயற்சிகள் பலனளிக்காது. அதிமுக-பாஜக கூட்டணி இந்த தேர்தலில் மண்ணைக் கவ்வப்போவது உறுதி என்பதை தமிழக மக்கள் தங்களது தீர்ப்பின் மூலம் நிரூபிப்பார்கள்.