election2021

img

பிரச்சாரக் கூட்டமா? வெற்றிவிழா கூட்டமா?

நடைபெற இருக்கின்ற  சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்  வி.செந்தில் பாலாஜி(கரூர்), மொஞ்சனூர் இளங்கோ(அரவக்குறிச்சி),இரா.மாணிக்கம்(குளித்தலை), சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம் தனி) ஆகிய தொகுதிகளில்  போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு வாக்கு சேகரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் மாலை 4 மணிக்கு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மக்கள் வெள்ளத்தில் மு.க.ஸ்டாலின் வாகனம் மெதுவாக ஊர்ந்து சென்றது.  மக்கள் கையசைத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தை பார்த்து தேர்தல் பிரச்சாரக் கூட்டமா அல்லது வெற்றி விழா பொதுக்கூட்டமா? என்று மு.க.ஸ்டாலின் வியந்து கூறினார். நான்கு வேட்பாளர்களுக்கும்  உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு அவர் பேசினார்.

;