election2021

img

பாஜக, பாமக சொல்லுக்கு ஆடும் அதிமுக தலைமை.... வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி...

சென்னை:
அ.தி.மு.க அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் அக்கட்சித் தொண்டர்களே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுவோர் தொடர்பான 177 வேட்பாளர்களின் பட்டியல் 2 கட்டங்களாக வெளியிடப்பட்டது. அதில் இரண்டே இரண்டு முஸ்லிம்வேட்பாளர்கள், 14 பெண் வேட்பாளர்கள் என கண் துடைப்புக்காக இடம் பெறச் செய்தது அதிருப்தி அடையச் செய்ததைபோன்று கட்சிக்காக பணியாற்று வோரை அ.தி.மு.க தலைமை புறக்கணித்துள்ளதாகவும் எடப்பாடி - ஓ.பி.எஸ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுபோக, அ.தி.மு.கவினர் கேட்டதொகுதிகளை பாஜகவுக்கும் பா.ம.கவுக்கும் கொடுத்ததால் அ.தி.மு.க நிர்வாகிகள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.இதனால் கடும் அதிருப்திக்கு உள்ளான அ.தி.மு.கவினர் தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பூந்தமல்லி, அரியலூர், பல்லடம், ஆலங்குளம், செய்யூர் என பல இடங்களில் அ.தி.மு.க தலைமையை கண்டித்து சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.அண்மையில் கட்சியில் சேர்ந்தவர்களை யெல்லாம் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல் வம் அறிவித்திருப்பது வேதனைக்குரியது என தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.புதுக்கோட்டை ஆலங்குடியில் 30க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்த போதும் அவர்களைகண்டுகொள்ளாமல் தர்ம தங்கவேலு என்பவரை வேட்பாளராக நியமித்ததற்கு எதிராக 500க்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் போராட்டத்தில் குதித்து தீக்குளிக்கவும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.இதுபோன்று சொந்த கட்சியினரையே திருப்திப்படுத்தாமல், ஜனநாயகத்தை கடைப்பிடிக்காமல் பா.ஜ.க., பா.ம.க சொல்வதற்கெல்லாம் அ.தி.மு.க தலைமை செவிசாய்த்து வருகிறது எனவும் அக்கட்சித் தொண்டர்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

வேட்பாளர் தேர்வில் முஸ்லிம்களை புறக்கணித்த அ.தி.மு.க!?
மேலும், மொத்தமாக அ.தி.மு.க அறிவித்த 177 வேட்பாளர்களில் 2 இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது அ.தி.மு.க. கம்பம் தொகுதியில் சையது கான், ஆம்பூரில் நஜர் முகமது ஆகியோர் மட்டுமே இஸ்லாமிய வேட்பாளர்கள் ஆவர்.முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா போட்டியிட விருப்பம் தெரிவித்தஇராமநாதபுரம் தொகுதியை அவருக்கு கொடுக்க மறுத்து பா.ஜ.கவுக்கு ஒதுக்கியுள்ளது அ.தி.மு.க தலைமை.அதேபோல இஸ்லாமியர்கள் நிறைந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, வாணியம்பாடி உள்ளிட்ட தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபிலையும் அ.தி.மு.க ஓரங்கட்டியுள்ளது.

போகும் இடமெல்லாம் சிறுபான்மையினர்களுக்கு ஆதரவான கட்சிஎன அதிமுகவினர் பேசி வரும் நிலையில் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் கண் துடைப்புக்காக வெறும் இரண்டே இஸ்லாமிய வேட்பாளர்களை அறிவித்திருப்பது அதிமுகவினரையே அதிர்ச்சியிலும் அதிருப்தியிலும் ஆழ்த்தியிருக்கிறது.இதுமட்டுமல்லாமல், சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சியை கொண்டு வந்த பாஜகவினரையும், அதற்கு மனப்பூர்வமான ஆதரவை அளித்த பாமகவினரையும் வேட்பாளராக அறிவித்திருப்பது அதிமுகவினர் மீது மக்களுக்கு இன்னும் கோபக்கணலை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கே.டி.ராஜேந்திர பாலாஜிமீது கொலை மிரட்டல் புகார் கூறிய சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளது என காட்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதில், விருதுநகரில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் ராஜேந்திரபாலாஜியின்  ஆதரவாளர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக் கிறார்கள். இதனால் மாவட்டச் செயலாளர்கள் பலரும் குமுறிக்கொண்டி ருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.

;