election2021

img

தமிழகத்தில் பாஜக - அதிமுக எதிர்ப்பு அலை வலுவாக உள்ளது.... திமுக கூட்டணி வரலாறு படைக்கும்.... கோவில்பட்டியில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி...

கோவில்பட்டி:
தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணிக்கு எதிரான அலை உள்ளதாக கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயலாளர் கே.பாலகிருஷ்ணன், 200க்கும் அதிகமான இடங்களை திமுக தலைமையிலான கூட்டணி வென்று வரலாறு படைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கோவில்பட்டியில் புதனன்றுசெய்தியாளர்களை சந்தித்த கே.பால கிருஷ்ணன் மேலும் கூறுகையில், கிராமப்புறங்களில்கூட அதிமுக- பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறக்கூடாது என்கிற எண்ணம் ஏற்பட்டு ள்ளது என்றார். எடப்பாடி யும் மோடியும் அவர்களது கூட்டுப் பிரச்சாரத்தில் இல்லாதவற்றை கூறினால் தமிழக மக்கள் நம்பி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பேசியிருக்கிறார்கள்.  கோதாவரி- காவேரி இணைப்பு திட்டத்தை மோடிநிறைவேற்றித் தருவார் என்று எடப்பாடி மேடையில் பேசுகிறார். ஆனால் உடனிருந்த பிரதமர் அப்படியான வாக்குறுதி எதையும் தரவில்லை. ஏற்கனவே கடந்த நான்கைந்து ஆண்டுகளாக மத்திய அரசுடன் இணக்கமாகவே இருப்பதாககூறி வருகிறார்கள். அப்போதெல் லாம் இப்படி ஒரு திட்டம் குறித்து பேசியதே இல்லை. தேர்தல் காலத்தில் மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும் என்பதற்காக இதுபோன்றவற்றை கூறுகிறார்கள்.

ஓபிஎஸ் உட்பட பல அமைச்சர் கள் தங்களது தொகுதிகளில் வாக்காளர்களை சந்திக்க முடியாத அளவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொகுதியில் உட்பட அமைச்சர்கள் தோல்வி அடைவது நிச்சயம். பாஜக மீது தமிழகவாக்காளர்களுக்கு இருக்கும் கடுமையான கோபத்தால் அவர்கள் டெபாசிட் இழப்பார் கள். இவ்வாறு அவர் கூறினார்.பண பலம், சாதி பலம் குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், “கோவில் பட்டி தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் நிச்சயமாக வெற்றி பெறுவார். அவரைஎதிர்த்து நிற்கும் வேட்பாளர்களில் ஒருவர் 2 முறை வெற்றிபெற்று அமைச்சரான பிறகும்குடிதண்ணீர் பிரச்சனைக்கே தீர்வு காணவில்லை. 

அவர் செய்தித்துறை அமைச்சராக அந்த துறைக்குஎன்ன செய்தார்? திரையரங்கில் திருட்டு டிக்கட் விற்பனையை தடுக்கவோ, திருட்டு விசிடியை தடுக்கவோ அவரால் முடியவில்லை. இது எவ்வளவு பெரிய மோசடி. சினிமா டிக்கட்டில் 18 சதவிகிதம் வரிபோடுகிறார்கள். சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் அடித்து கொல்லப்பட்டார்கள். அது லாக்கப் மரணம் இல்லைஎன்று இந்த அமைச்சர்தான் முதலில் கூறினார். இப்போது உயர்நீதிமன்றம் அறிவித்த சிபிஐ விசாரணையில் லாக்கப் மரணம் என்பது உறுதியாகி சிலர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். அமைச்சர் கூறியது உண்மையா? நீதிமன்றம்கூறியிருப்பது உண்மையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.   

குறிப்பிட்ட சாதி ஓட்டுகளைப் பெற்று ஒருவர் வெற்றிபெற்றுவிட முடியாது. அதுபோன்ற அவர்களது முயற்சி எதிர் விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். மற்றொருவர் டிடிவி. இவர் ஆர்.கே.நகரில் நன்றி சொல்லக்கூட போகாதவர். வேறு எங்கும் போட்டியிட முடியாததால் இங்கே வந்து நிற்கிறார். அவருடன்ஒரு அணியோ ஆதரவோஇல்லை. நிச்சயமாக தமிழ் நாடு முழுவதும் வீசும் திமுக கூட்டணிக்கான ஆதரவு அலை கோவில்பட்டியிலும் வீசுகிறது. சீனிவாசன் மகத் தான வெற்றி பெறுவார்” என்றுகே.பாலகிருஷ்ணன் கூறினார்.  பேட்டியின்போது திமுகபொதுக்குழு உறுப்பினரும் தொகுதி பொறுப்பாளருமான  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா, நகரச் செயலாளர் கருணாநிதி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன்,நகரச் செயலாளர் ஜோதிபாசு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் காமராஜ், வட்டாரத் தலைவர் ரமேஷ் மூர்த்திஉள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தோழர் கே.பாலகிருஷ்ணன்அவர்களின் தமிழக பிரச்சார செய்தி தொகுப்பு 1 மற்றும் 4-ஆம் பக்கம் என 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் தொடர்ந்து படிக்கும் வசதிக்காக இதே தொகுப்பில் ஒரே தொகுப்பாக உள்ளது.   

;