election2021

அஞ்சல் வாக்குச்சீட்டை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர்....

சென்னை:
தனது அஞ்சல் வாக்குச் சீட்டை சமூகஊடகங்களில் வெளியிட்ட பள்ளி ஆசிரியரைபணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்  சஹாரா ஆரோக்கியா அனுஷ்டால்தனது அஞ்சல் வாக்குச்சீட்டை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தென்காசிதொகுதி காங்.வேட்பாளர் பழனிநாடார் புகாரளித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், ஆசிரியர் வாக்களித்த பின் வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்தது தெரியவந்துள்ளது. இதன் மூலம்தேர்தல் நடத்தை விதிகளை மீறிய ஆசிரியரைபணியிட நீக்கம் செய்து அறிக்கை அனுப்புமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

;