election2021

img

கையைவிரித்த அதிமுக... தனித்துவிடப்பட்ட ஏசிஎஸ்....

புதிய நீதி கட்சி அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது. இந்த கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் கடந்த முறை நடந்த வேலூர் தொகுதி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு திமுக வேட்பாளரும் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்திடம் படுதோல்வி அடைந்தார்.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று அறிவித்தார். மேலும் தங்கள் கட்சிக்கு வாய்ப்பு கேட்டு கடிதம் கொடுத்து இருந்தார். ஓரிரு தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று கறாராக கூறிவிட்டது அதிமுக தலைமை. இதையடுத்து இந்த தேர்தலில் புதிய நீதி கட்சி போட்டியிட போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார்.

;