election2021

img

அதிமுக தொண்டர்கள் போர்க்கொடி...

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக கணிதா சம்பத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே திருப்போரூர் தொகுதியில் வெற்றி பெற்றவர். இவர் மீதும் இவரது கணவர் சம்பத் மீதும் ஏராளமான கொலை-கொள்ளை, சொத்து அபகரிப்பு வழக்குகள் ஏராளமாக இருந்ததால், மதுராந்தகம் தொகுதிக்கு தாவி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். கடந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்த முறை செய்யூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வேட்பாளர் என்பதாலும் ஏராளமான வழக்குகள் உள்ளதாலும் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், இவரை மாற்றக்கோரி கல்பாக்கம், புதுப்பட்டினம் பகுதியில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அமைச்சர் பாஸ்கரனுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளதை கண்டித்து சிவகங்கையில் அவரது ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகிய இருவருக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொகுதிப் பங்கீட்டில் பாமகவுக்கு பூந்தமல்லி (தனி) தொகுதியை ஒதுக்கியதை கண்டித்து அதிமுகவினர் நசரத்பேட்டை சாலை சிக்னல் அருகில் திரண்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

;