election2021

img

வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுக மறியல்... யார் தோற்றால் என்ன? திருவில்லி., மக்கள்...

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மான்ராஜ் போட்டியிடுவார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இவரை மாற்றவேண்டுமென வலியுறுத்தி வியாழனன்று திருவில்லிபுத்தூரில் அதிமுக-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சந்திரபிரபாவை வேட்பாளராக அறிவித்தால் தான் இந்தத் தொகுதியை அதிமுக தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்றனர்.

ஆனால் மறியலை வேடிக்கை பார்த்து சிரித்த மக்களோ, அதிமுக தோல்வியடைவது உறுதி; மான்ராஜ் தோற்றால் என்ன? சந்திரபிரபா தோற்றால் என்ன? எனக்நையாண்டி செய்தனர்.அமைச்சர் இராஜேந்திர பாலாஜிக்கு மிகவும் விசுவாசமாக இருந்த தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாவை அதிமுக தலைமை கழற்றிவிட்டது தான் ‘‘ஹைலைட்’’.

;