குற்றப் பரம்பரை சட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சமூக மக்கள் (சீர்மரபினர்) தங்களுக்கு டிஎன்டி (பழங்குடியினர்) சான்றிதழ் வழங்கக் கோரி மதுரை, தேனி உட்பட தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தேனி மாவட்ட மக்கள் வாக்காளர்களின் காலில் விழுந்து ‘‘அதிமுகவிற்கு வாக்களிக்காதீர்கள்’’ என மன்றாடி வருகின்றனர். இந்த சமூக மக்கள் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் கணிசமாக உள்ளனர். பழங்குடியினர் சான்றிதழ் வழங்காமல் புறக்கணிக்கும் அதிமுக-விற்கு திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்கள் எப்படி வாக்களிப்பார்கள்? துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையே புறக்கணிக்கும் மக்கள், அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஏற்றுக்கொள்வார்களா என்ன?