சென்னை:
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7,255 வேட்புமனுக்களில் 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்றும் இந்தத் தேர்தலில் 6.29 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுசென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் மொத்தம் 6.29 கோடிவாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 3,09 கோடி, பெண்கள் 3,19 கோடி. 7,192திருநங்கைகள்” என்றார். இந்தத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7,255 வேட்பு மனுக்களில் 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் சாகு கூறினார்.