election2021

அலட்சியம் வேண்டாம்... அயராது உழைப்போம்... 1ஆம் பக்கத் தொடர்ச்சி...

மக்கள் விரோத பா.ஜ.க.வும், மாநிலத்தைப் பாழாக்கிய ஊழல் - அடிமைஅ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்திருக்கின்றன. தமிழக மக்கள் அந்தக்கூட்டணியை முற்றாக நிராகரிப்பார்கள் என்பதைக் களத்தில் நேரடியாகக் காண முடிகிறது. அதே நேரத்தில், ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து -அத்துமீறல்களில் - முறைகேடுகளில் ஈடுபட்டு தி.மு.கழகம் தலைமையிலான கூட்டணியின் வெற்றியைத்தடுத்திட - குறைத்திட முனைவார்கள். கழகம் போட்டியிடும் இடங்களி
லோ - தோழமைக் கட்சியினர் போட்டியிடும் இடங்களிலோ குழப்பங்களை உருவாக்கி, தற்காலிகமாகக் குளிர்காய நினைப்பார்கள். குன்றிமணி அளவுகூட அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. நமது வெற்றி இலக்கும் குறைந்திடக் கூடாது.

வெற்றிச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்வரை, நம் உன்னதமான உழைப்புக்கு ஓய்வுஎன்பதே கிடையாது; நம் கண்களுக்கு உறக்கம் கிடையாது; நம் சிந்தனையில்-செயல்பாட்டில் சிறிதும் சோர்வு கிடையாது.கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியைத் தரும்.சிறு துளிகள் பெருகிச் சேர்ந்து கடலாவது போல, ஒவ்வொரு வாக்கும் கவனமாகச்  சேகரிக்கப்படும்போது, வெற்றியின் அளவு வரலாறு காணாத வகையில் உயர்ந்திடும். அதனால், ஒவ்வொரு நாளும்  வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரியுங்கள். ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுங்கள்.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும், நான் தொலைநோக்குத்திட்டம் எனும் தலைப்பில் அளித்துள்ள 7 உறுதிமொழிகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி பரப்புரை செய்யுங்கள். அடிமை அ.தி.மு.க.வின் அவல ஆட்சியையும் - தேர்தல்நேரத்தில் கொடுத்துள்ள மோசடிவாக்குறுதிகளையும் அம்பலப்படுத்துங்கள்.

தெருக்கள்தோறும், திண்ணைகள் தோறும் பரப்புரையைத் தொடருங்கள். மக்கள் கூடும் இடங்களில்துண்டறிக்கைகளை வழங்கி வாக்கு கேளுங்கள். தனியாக உரையாடும் வாய்ப்புகளிலும், தமிழகத்தை மீட்கவேண்டுமென்றால் தி.மு.கழக ஆட்சி அமைந்திட வேண்டும் என்பதைஎடுத்துரைத்து ஆதரவு திரட்டுங்கள்.அலட்சியம் வேண்டாம்; ஒதுங்கிநிற்காதீர்; முன்னின்று செயல்படுங்கள். தோழமை சக்திகளுக்குத் தோள் கொடுத்திடுங்கள். உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் பாடுபட்டுகண்டுள்ள விளைச்சலில், எந்தவிதசேதாரமும் எக்காரணம் கொண்டும்இடையில் ஏற்பட்டுவிட அனுமதியாமல், முழு வெற்றியை அறுவடை செய்வதற்கு, கவனம் சிதறாமல் - கருத்தொன்றி  உழைத்திடுங்கள்!இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;