election2021

img

கேரள ஐடி நகரத்தின் சிற்பி கடகம்பள்ளி சுரேந்திரன்....

திருவனந்தபுரம்:
கேரளாவின் ஐ.டி நகரமான கழக்கூட்டத்தின் மண்ணை நீங்கள் அடையும்போது, அங்குள்ள மக்கள் கடகம்பள்ளி சுரேந்திரனை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அமைச்சராக அவர் சுறுசுறுப்பாக பணியாற்றிய போதிலும், சொந்த தொகுதியின் உயிர்நாடியாக செயல்பட்டார். கடகம்பள்ளி சுரேந்திரன் நாற்பது ஆண்டுகால பொது சேவையின் பாரம்பரியம் கொண்டவர்.1952 இல் பிறந்த சுரேந்திரன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முந்தைய வடிவமான கேஎஸ்ஒய்எப் கிளை நிர்வாகியாகவும், கடகம்பள்ளி பஞ்சாயத்து செயலாளராகவும், தாலுகா செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும் செயலாற்றியுள்ளார். 1974 இல் சிபிஎம்மில்உறுப்பினரானார். ஆனயாரா கிளை செயலாளர், பேட்டா உள்ளூர் செயலாளர், வஞ்சியூர் பகுதி செயலாளர், திருவனந்தபுரம் மாவட்ட குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார். 2007 முதல் 2016 வரை மாவட்ட செயலாளர். தற்போது மாநிலக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
 

;