திருவனந்தபுரம்:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், கேரளமாநில காங்கிரஸ் துணைத்தலைவருமான ரோசாகுட்டி,கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருத்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஏறக்குறைய 37 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியுடன் பின்னிப் பிணைந்து, பல்வேறுபோராட்டங்களில் முன்னின்றவர் ரோசாகுட்டி. கேரள மகளிர்ஆணையத்தின் தலைவராகவும், 1991 முதல் 96 வரை வயநாடு மாவட்டம் சுல்தான் பத்ரிதொகுதி எம்எல்ஏ-வாகவும் பதவி வகித்துள்ள ரோசாகுட்டி, தற்போது காங்கிரசிலிருந்து விலகியது, அக்கட்சிக்குபின்னடைவாக கருதப்படுகிறது.ஏற்கெனவே மகளிர் காங்கிரஸின் மூத்த தலைவர் லத்திகா சுபாஷ், தனக்குத் தேர்தலில் சீட் வழங்கவில்லை எனக்கூறி அண்மையில்தான் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தனது தலையை மொட்டையடித்துக் கொண்டார். இது காங்கிரசுக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற் போது ரோசாகுட்டி விலகல் மூலம் அடுத்த அதிர்ச்சி காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, காங்கிரசிலிருந்து ஏன் விலகினேன் என்பது குறித்து செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்துள்ளரோசா குட்டி, “கேரளத்தில் பல்வேறு விவகாரங்களில் கட்சி எடுக்கும் நிலைப்பாடு எனக்கு அதிருப்தி அளித்து வந்தது. குறிப்பாக, கேரளத் தில் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் வலுவான மதச்சார்பற்றகூட்டணியை உருவாக்க முடியவில்லை. இதன் காரணமாகவே காங்கிரசிலிருந்து விலகியுள்ளேன்” என்று தெரிவித் துள்ளார்.மேலும், நடைபெறவுள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் ரோசா குட்டி அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், கண்ணூர் முன்னாள் எம்.பி.யுமான பி.கே. ஸ்ரீமதி, ரோசா குட்டியை நேரில் சந தித்துப் பேசியுள்ளார்.