election2021

img

அமைதி, வளர்ச்சியைக் கருதி தேர்தலில் வாக்களியுங்கள்... வீடியோ வெளியிட்டு மன்மோகன் சிங் வேண்டுகோள்...

புதுதில்லி
நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னிறுத்தி, தேர்தலில் மக்கள்வாக்களிக்க வேண்டும் மதம், கலாச்சாரம், மொழி அடிப்படையிலான பிரிவினைகளுக்கு இடம்கொடுக்கக் கூடாது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

அசாம், மேற்குவங்க மாநில சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலையொட்டி டுவிட்டரில் வீடியோ பதிவு ஒன்றை மன்மோகன் சிங் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:அசாம் மாநிலம் எனது 2-ஆவது வீடுஆகும். 28 ஆண்டுகள் நான் இந்த மாநிலத்தில் இருந்துதான் மாநிலங்களவைக்கு தேர்வு ஆனேன். 5 ஆண்டுகள்நிதியமைச்சராகவும் 10 ஆண்டுகள் பிரதமராகவும் நான் பணியாற்ற அசாம் மக்கள் எனக்கு வாய்ப்பு வழங்கினர்.

அசாமில் நீண்ட காலமாக பயங்கரவாத பிரச்சனை நீடித்து வந்தது. ஆனால்,2001 முதல் 2016 வரை, மறைந்த முன் னாள் முதல்வர் தருண் கோகோயின் ஆட்சிக் காலத்தில் அசாமில் புதிய அத்தியாயம் தொடங்கியது. மாநிலம் வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைத்தது.ஆனால் இப்போது மீண்டும் மதம், இனம், மொழிரீதியாக மக்களிடையே பிரிவினை தூண்டப்படுகிறது. மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படுகின்றன. பதற்றமும் பயமும் வியாபித்து பரவியுள்ளது. மற்றொரு புறத்தில், அவசரகதியில்அமல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்புமுறையாலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையாலும் நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள் ளது. ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.இந்த நேரத்தில் அசாமின் அமைதி,வளர்ச்சியை முன்னிறுத்தி சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டுகிறேன்.இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

;