கவுகாத்தி:
‘அசாமின் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜகதான்வெற்றி பெறும்’ என்று தேர்தல் விதிகளை மீறி விளம்பரங்கள் வெளியிடப்பட்டு இருப்பதாக, தேர்தல் ஆணையத் தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
அசாமில் முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமையன்று தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 1-ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 39 தொகுதிகளுக்கு இரண்டாம்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில், அனைத் துத் தொகுதிகளிலும் பாஜகதான் வெற்றிபெறும் என நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.முதற்கட்ட வாக்குப் பதிவுதுவங்கிய மார்ச் 27 காலை7 மணிமுதல் மூன்றாம் கட்டத்தேர்தல் முடிவடையும் ஏப்ரல்29 இரவு 7.30 மணி வரை எந்தவித கணிப்புகளையும் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள சூழலில், 126 தொகுதிகளிலும் பாஜகதான் வெற்றிபெறும் என்றுவிளம்பரம் வெளியிட்டது தேர் தல் விதிமுறைகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மாநிலத் தலைவர் ரஞ்சித் குமார் தாஸ், 8 நாளிதழ்கள் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தீஸ்பூர் காவல்நிலையம், அசாம் தலைமைத்தேர்தல் அதிகாரி அலுவலகம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றிடம் அசாம் மாநில காங்கிரஸ் சட்டப் பிரிவின் தலைவர் நீரன் போரா புகார்அளித்துள்ளார்.இரண்டாம், மூன்றாம் கட்டத் தேர்தலில் மக்களின் மனதை மாற்ற பாஜக திட்டமிட்டு செயல்பட்டு உள்ளதாகபோரா குற்றம் சாட்டியுள்ளார்.