அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. சோர்போக் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பார்பேடா நகரில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மனோரஞ்சன் தாலுக்தாரை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான உத்தவ்பர்மன் உரையாற்றினார். இத்தொகுதியில் வேட்பாளர் மனோரஞ்சன் தாலுக்தாருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.