election-2019

img

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு - மாவட்ட தேர்தல் அதிகாரி

புதுச்சேரியில் வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இன்று மாலை முதல் 4 நாட்களுக்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”புதுவை மாநிலத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 19-ஆம் தேதி காலை 6 மணி வரை 4 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் 5-க்கும் மேற்பட்டோர் பொது இடங்களில் கும்பலாக நிற்கக்கூடாது. விளம்பர பேனர்கள், துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக்கூடாது”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


;