election-2019

img

தொழிலாளர் பணம் வீணாகலாமா? சட்ட அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள்

தொழிலாளர் பணம் வீணாகலாமா?

கல்லூரியை திறக்க மத்திய அரசே தடையாக இருந்த காலத்தில் மருத்துவத்துறை பேராசிரியர்களும், அலுவலர்களும் வேறுபணி தேடி சென்று விட்டனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் இருந்த பழைய மூன்று மாடிக் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தும், பூட்டியே வைக்கப்பட்டிருந்தன. 32 லிப்ட்கள் அமைக்கப்பட்டு அதில் ஒன்றிரண்டு மட்டும் இயக்கப்பட்டன. 500 படுக்கை வசதிகளுடன் ஏற்கனவே நோயாளிகள் நிறைந்து காணப்பட்ட நிலை மாறி 200 படுக்கைகள் அளவுக்கே பயன்பாட்டில் இருந்து வந்தது. புற நோயாளிகளின் வருகையும் குறைந்தது. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் இப்படி வீணாகலாமா என தொழிற்சங்கத்தினர் கேள்வி எழுப்பினர்.


சட்ட அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள்

கோவை உட்பட நாடு முழுவதும் 13 மருத்துவ கல்வி நிறுவனங்களை தொடங்கப்பட்டதன் பின்னணி குறித்து அன்றைய கோவை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரும், தற்போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான பி.ஆர்.நடராஜன் கூறியதாவது: 1948 ஆம் ஆணடு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி ஏற்கனவே செயல்பட்டு வந்தன.2012-13இல் தொழிலாளர்கள் செலுத்திய பணம் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் இஎஸ்ஐ வசம் இருந்தது. அதில் நாடு முழுவதும் 13 மருத்துவ கல்வி நிறுவனங்களை அமைக்க முடிவுசெய்யப்பட்டது. தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில் இந்த கல்லூரி அமைய கடும் முயற்சி தேவைப்பட்டது. ரூ.580.57 கோடி முதலீட்டில் இன்று தொழிலாளர்களின் சொத்தாக மருத்துவக் கல்லூரி உள்ளது. இஎஸ்ஐ கல்வி நிறுவனங்களை மூட மத்திய அரசு முடிவு செய்ததால் தமிழக அரசே நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கடந்த 2 ஆண்டுகளாக, நீட் தகுதி அடிப்படையில் 65 மாணவர்களை தமிழக அரசும், 15 மாணவர்களை மத்திய அரசும் நிரப்புகின்றன. மொத்தமுள்ள 100 இடங்களில் மீதமுள்ள 20 இடங்கள் இஎஸ்ஐ பயனாளிகளாக உள்ள தொழிலாளர் குடும்பத்து பிள்ளைகளுக்கு கிடைக்கிறது என்றார்.


தொகுப்பு: சி.முருகேசன்




;