election-2019

img

நமது ‘சவுகிதார்’ சிறைக்குச் செல்லப் போகிறார்!

நாக்பூர், ஏப்.6-

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ரபேல் ஊழலில் நமது‘சவுகிதார்’ (பிரதமர் மோடி) சிறைக்குச் செல்வது உறுதி என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.மகாராஷ்டிர மாநிலம்நாக்பூரில் நடைபெற்றதேர்தல் பிரச்சாரத்தின் போது, இதுதொடர்பாக ராகுல் காந்தி மேலும் பேசியிருப்பதாவது:ரபேல் போர் விமானக்கொள்முதல் விஷயத்தில், முதலில் போடப்பட்ட உண் மையான ஒப்பந்தத்தை மாற்றி, விமானம் ஒன்றுக்குரூ. 1600 கோடி என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் நடந்த முறைகேடுகளை, அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நன்கு அறிவார்.இந்த ஒப்பந்தம் மூலம்பணத்தைத் திருடியதே, ‘சவுகிதார்’ எனும் காவலாளிதான் என்பதும் பாரிக்கருக்குத் தெரியும். அதனால்தான், ரபேல் ஒப்பந்தம் குறித்த விவரங்கள் அனைத்தையும் மோடியிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.எனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ரபேல்ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தப்படும். இதன் மூலம் நமது ‘சவுகிதார்’ நிச்சயமாக சிறைக்குச் செல்வார்.இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார்.

;