election-2019

img

போக்குவரத்து நெரிசலை குறைக்க நிரந்தர தீர்வு

சென்னை, ஏப். 4-


திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுகவேட்பாளர் தயாநிதி மாறன் சேத்துப்பட்டு,டோபி காலனி, எழும்பூர், சித்தாதரிப்பேட்டை, புதுப்பேட்டை, சூளை உள்ளிட்டபகுதிகளில் வியாழனன்று (ஏப். 4) வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “மத்தியில் திமுக ஆதரவுடன் ஆட்சி நடந்தபோது தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தோம். அதன்பிறகு, ஆட்சிக்குவந்த பாஜக தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. மத்திய சென்னை தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சாலைகளை விரிவுபடுத்தவும், மேம்பாலங்கள் அமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.திமுக மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, தொகுதி செயலாளர் விஜயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், தொகுதி செயலாளர் கே.முருகன், சிறீகாந்த், ஆறுமுகம், ராஜமணி, சத்தியவேல், கே.அன்பு, வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி பா.கருணாநிதி, தொகுதிச்செயலாளர் ரஞ்சித், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜீவன், தொகுதிச் செயலாளர் தென்றல் நிசார், விசிக மாவட்டச் செயலாளர் இரா.செல்வம், தொகுதிச் செயலாளர் இளங்கோ, மனித நேய மக்கள் கட்சி தொகுதி செயலாளர் ஷாஜகான் உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

;