education

img

முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு 

முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.  

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மூலம் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களில் சேர கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணைய வாயிலாகப் பெறப்பட்டு வருகிறது. 

ஏற்கெனவே விண்ணப்பங்கள் பெற அக்டோபர் 31 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களுக்கு வயது உச்ச வரம்பு தற்போது அதிகரிக்கப்பட்டதால் நவம்பவர் 9 வரை மேலும் அவகாசம் அளித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

;