சென்னை, ஜூலை 13- நீட் தேர்வை ரத்து செய்து அதற்கான அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி யுள்ளார். மருத்துவ படிப்புக ளுக்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறு கையில், இந்தியாவில் கொ ரோனா 3 ஆம் அலை ஆரம்பித்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறியி ருக்கும் நிலையில், செப் டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.