education

img

ரமலான் நாளில் தேர்வு இல்லை சிபிஎஸ்இ தேர்வு தேதி மாற்றம்.....சு. வெங்கடேசன் எம்.பி.யின் கோரிக்கை வெற்றி...

சென்னை:
ரமலான் அன்று சி.பி.எஸ்.இ தேர்வுகள் நடந்தேறுகிற சூழல் இருப்பதைச் சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம்எழுதியிருந்தார். இக்கோரிக்கையை ஏற்று சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. 

இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாளான ரமலானுக்கு இவ்வாண்டு தமிழக அரசும், மத்திய அரசும் மே 14 அன்று ரமலான் விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறும் என்பதால் ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதை கணக்கிற் கொள்ளாமல் சி.பி.எஸ். இ 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வு களை மே 13 மற்றும் மே 15 தேதிகளில் அறிவித்துள்ளது. இந்த தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்ற வேண்டும் என்று சு. வெங்கடேசன் எம்.பி.கோரிக்கை விடுத்திருந்தார். 

கல்வி அமைச்சர் பதில்
இதற்கு 2021 பிப்ரவரி 23 தேதியிட்ட கடிதம் மூலம் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அளித்துள்ள பதிலில் “சி.பி.எஸ்.இ தேர்வுத் தேதிகளை மாற்றுவது குறித்தஉங்கள் பிப்ரவரி 8 தேதியிட்ட கடிதம் கிடைத்தது. அதன் மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருந் தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி, “எனது கோரிக்கை பரிசீலிக்கப்படுவது மகிழ்ச்சி. நல்ல முடிவு விரைவில் வருமென்று நம்புகிறேன்” என்றுகூறினார்.

தேர்வு தேதிகள் மாற்றம்
இந்நிலையில் சு.வெங்க டேசன் எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகள் மே4 ஆம் தேதியன்று துவங்கி, மே 6, 10, 11, 12, 17, 18, 20, 21, 22, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மே 4 அன்று துவங்கி, மே 5, 6, 8, 10, 11, 12, 19, 20, 21, 22, 24, 25, 27,28, 29, 31, ஜூன் 2 3, 4 5, 7, 8, 9, 10, 11, 12, 14  ஆகியதேதிகளில் நடைபெறும்என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.எனது கோரிக்கையை ஏற்று  தேர்வுத்தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சு.வெங்கடேசன் எம்.பி., கூறியுள்ளார்.

;