economics

img

எஸ்பிஐ வங்கியில் 2056 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் 2056 புரபஷனரி ஆபிசர்ஸ் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து அக்டோபர் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, வங்கி பணி தேர்வுக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு:

நிறுவனம் : பாரத ஸ்டேட் வங்கி

மொத்த காலியிடங்கள் : 2056

பணி : Probationary Officers

1.    Regular Officers 2.  

2.Backlog Vacancy  

ஊதியம் : ரூ.41,960

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.  

வயது வரம்பு : 01.04.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை:

 முதல்நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு நிலைகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

விண்ணப்பக் கட்டணம் : ரூ.750 இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/Careers அல்லது https://www.sbi.co.in/Careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2021  

மேலும் விவரங்கள் அறிய : https://bank.sbi/documents/77530/11154687/041021-Final+Advertisement+PO+21-22.pdf/61eb5452-c5e8-e057-e460-1e89486812d8?t=1633349820829 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

;