economics

img

கொரோனா 2-ஆவது அலையால் ஜிடிபி-யில் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு... ரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கையில் கணிப்பு .....

புதுதில்லி:
கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

ஜூன் மாதத்துக்கான தனது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, அதில் இதனைத் தெரிவித்துள்ளது.இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நிலை, இந்திய வளர்ச்சியின் போக்கு,மற்றும் நாட்டின் நிதிநிலை கட்டமைப்பு ஆகியதலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து கொரோனா பாதிப்புடன் போராடி வருகிறது. மக்கள் எச்சரிக்கையுடனான நம்பிக்கைக்குத் திரும்பியிருந்தாலும் உள்நாட்டுத் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது. அதேசமயம் வேளாண்மற்றும் டிஜிட்டல் சேவைகள் வளர்ச்சியின் பாதையில் உள்ளன. மேலும் தொழிற்துறை உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவை ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் சிறப்பாக செயலாற்றுகின்றன.தற்போது இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கு தடுப்பூசி போடப்படும் வேகத்தை அதிகரிப்பது ஒன்றே தீர்வு. பொருளாதாரத் தில் நிலவும் சிக்கல்கள், தடைகள் அனைத்தையும் எதிர்கொண்டு மீண்டு வரும் திறன் இந்தியப்பொருளாதாரத்துக்கு உள்ளது.கொரோனா பாதிப்பு இந்தியா மட்டுமல்லாமல் எல்லா நாடுகளின் அரசுகளையும் அவற்றின் நிதிக் கட்டமைப்புகளில் கவனம் செலுத்தும் கட்டாயத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்திய நிதி கட்டமைப்பை ஊக்குவிக்க அரசு நிதித் தொகுப்பை வெளியிட்டது. மேலும் நிதி நிலையைச் சரி செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதுஎன்பதை விடவும், எப்படி திட்டமிடப் பட்டுள்ளது என்பதை கவனிப்பது அவசியம். மூலதன ஒதுக்கீடு மற்றும் வருவாய் செலவினம் இடையிலான விகிதம் மற்றும் வருவாய்பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு நாட்டின் நீடித்த வளர்ச்சிக் கான திட்டங்களை நாம் வகுக்க முடியும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

;