districts

img

பெண் குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளை துரிதமாக நடத்திடுக ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

செங்கல்பட்டு,ஜூன் 19- செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளை துரிதமாக நடத்தி முடித்து விட வேண்டும் என அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. மாதர் சங்கத்தின் 13வது மாநாடு  செங்கல்பட்டில் ஞாயிறன்று (ஜூன் 19)  மாவட்டத் தலைவர் வி.தமிழரசி தலைமையில் நடைபெற்றது. மூத்த உறுப்பினர் ஆர்.ராஜலட்சுமி சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் வி.அனுசுயா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார், மாவட்ட துணைத் தலைவர் ஜி.ஜெயந்தி வரவேற்றார், மாநாட்டை துவக்கி வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி. சுகந்தி பேசினார், மாவட்டச் செயலாளர் எஸ்.கலையரசி வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் ஜெ.ஜோஸ்பின்விஜி வரவு,செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர்.  மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.வாலண்டினா,  செயற் குழு உறுப்பினர் எஸ்.கீதா, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.மோகனன் ஆகியோர்  பேசினர்.  

தீர்மானங்கள்
 பல்வகை புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு நிலத்தை வரைமுறைப்படுத்தி பெண்கள் பெயரில் பட்டா வழங்க வேண்டும், நூறு நாள் வேலைத் திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும், மாவட்டத்தில் நுண் நிதி நிறுவனங்களை முறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டத் தலைவராக எஸ். கலையரசி, செயலாள ராக ஜி.ஜெயந்தி, பொரு ளாளராக ெஜ.ஜோஸ்பின் விஜி உள்ளிட்ட 15 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.

;