districts

பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணமின்றி வாகனங்கள் அனுமதி

செங்கல்பட்டு,ஜன.18- பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் விடுமுறை முடிந்து சென்னை திரும் பிய போது பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரனூர் சுங்கச்சாவ டியில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக வாக னங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து சுங்கக்கட்டணம் செலுத் தாமல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. அதன் பின்னர் போக்குவரத்து நெரிசல் மெல்ல மெல்ல சீரானது. கோயம்பேடு மார்கெட்  அருகே உள்ள “ஏ” மற்றும்  “சி” சாலை, காளியம்மன் கோவில் சாலை, மெட்டுக் குளம் சந்திப்பு, பள்ளிக்கூட தெரு சந்திப்பு, நூறடி சாலையில் உள்ள கேம்ஸ் வில்லேஜ் சந்திப்பு, பஸ் நிலைய நுழைவு வாயில் ஆகிய முக்கிய இடங்களில் காவல்துறை அதிகாரிகள்  உட்பட சுமார் 50 போக்கு வரத்து காவலர்கள் போக்கு வரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.