districts

வண்டலூர் முதல் காட்டாங்குளத்தூர் வரை மேம்பாலம் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகிறது

செங்கல்பட்டு, ஜூன். 13- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு  வரை மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் இதுகுறித்து  வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும்   அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறி யுள்ளார்.

 செங்கல்பட்டு மாவட்டம், கிளாம் பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன் அதிகாரிகளு டன்‌ வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே ஏற்படும் கடுமையான‌ போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், செங்கல்பட்டு, தாம்ப ரம், பல்லாவரம் சட்டமன்ற உறுப் பினர்கள், தாம்பரம் காவல்துறை ஆணையர் அமல்ராஜ், கிளாம் பாக்கம் பேருந்து நிலைய செயல்  அலுவலர் பார்த்திபன் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.  

இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர்  பல்லாவரத்தில் இருந்து செங்கல் பட்டு வரை வார விடுமுறை நாட்களி லும் பண்டிகை நாட்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இதனால் மக்கள் பாதிப்புக் குள்ளாகி வருகின்றனர்.‌ இதை சரி  செய்ய வேண்டுமென அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து, ஆலோசனை நடத்தினோம். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தற்பொழுது குழு  ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு விரைவில் ஆய்வு செய்து அறிக்கை தர உள்ளது.

அந்த  அறிக்கையை வைத்து அதற்கு  ஏற்றவாறு பணிகளை செய்ய  தயாராக உள்ளோம். இருக்கின்ற  பிரச்சினைகளை சரி செய்ய அதி காரிகளுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. 10 நாட்களுக்குள் அறிக்கை  பெறப்பட்டு, அதற்கேற்றார் போல் நடவடிக்கை எடுக்கப்படும்.  கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பணிகள் சற்று தாமதம் ஆகியது விரைவில் பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

வண்டலூர் முதல் காட்டாங் குளத்தூர் வரை மேம்பாலம் அமைக் கும் பணி தொடர்பான அறிவிப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளி யாகும். அதேபோன்று சாலை விரிவாக்கம் பணியின்போது அகற்றப்பட்ட, பேருந்து நிறுத்தங்கள்  சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதியி லிருந்து கட்டுவதற்கான நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.