செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டி ருந்த தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் திறந்து வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல் ராஜ், வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ், செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிவகுரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.