செங்கல்பட்டு, ஏப்.4- தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டத் தலைவரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செங்கல்பட்டு கிளை பொருளாளருமான வேதகிரி மாரடைப்பால் திங்களன்று (ஏப் 3 ) அமிர்தசரசில் காலமானார். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலருமான இவர் 1971ம் ஆண்டு எஸ்ஒய்எப்பில் உறுப்பி னராக சேர்ந்து பின்னர் வட்டார வளர்ச்சி அலுவல ராக பணியில் சேர்ந்து தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத் தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். அரசு ஊழி யராக இருந்து ஓய்வு பெற்ற பின் அமைப்பு சாரா தொழிலாளர்களை திரட்டு வதிலும், தையல் கலைஞர் கள் திரட்டுவதிலும் தன் வாழ்க்கையை அர்ப்பணித் தவர். சிஐடியு மாவட்ட நிர்வாகியாகவும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலை வராகவும், தமுஎகச செங்கல்பட்டு கிளைப் பொருளாளராகவும் ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சித் துறையின் மாநில நிர்வாகியாகவும் திறம்பட செயல்பட்டார். இந்நிலையில் ஏப்ரல் 5 அன்று டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் சங்கம், சிஐடியு சார்பில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லிக்கு சென்றி ருந்தார் திங்களன்று (ஏப்ரல் 3) இரவு 10 மணியளவில் அமிர்தசரசில் தங்கியிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். தோழரின் இறுதி நிகழ்வுகள் புத னன்று (ஏப் 5)செங்கல் பட்டு கைலாச நாதர் கோவில் பெரிய நத்தம் பகுதியில் அவரது இல்லத்தின் அருகே நடை பெறவுள்ளது.