districts

img

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் திடீரென புகுந்த சாக்கடை கழிவுநீர்..!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென துர்நாற்றத்துடன் ஆறாக ஓடிய கழிவுநீரால் அங்குள்ள மக்களுக்கும் ஊழியர்களுக்கும் நோய்த்தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாலை மேலமையூர் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளிக்க வந்திருந்தனர்.

அப்போது திடீரென மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் துர்நாற்றத்துடன் சாக்கடை கழிவுநீர் ஆறாக ஓடியது. இதன் காரணமாக மனு கொடுக்க வந்த மக்களும் அங்குள்ள ஊழியர்களும் மூக்கை மூடியபடியே சென்று வருகின்றனர். மேலும் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஆறாக ஓடும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

;