districts

ஒத்த ஓட்டு பாஜக

செங்கல்பட்டு, பிப். 22- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செங்கல்பட்டு நக ராட்சி 9 வது வார்டில் போட்டி யிட்ட பாஜக வேட்பாளர் ஒரு வாக்கு பெற்று தோல்வி அடைந்தார். செங்கல்பட்டு நகராட்சி யில் 33 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடை பெற்றது. இதில் 9வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கமலக் கண்ணன் பிரச்சாரத்தின் போது எப்போதும் ஐந்து நபர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் செவ்வாயன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது பாஜக வேட்பாளர் கமலக்கண்ணன்   ஒரு வாக்கு கள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். அவருடன் 4 முதல் 5 பேர் வாக்கு சேகரிக்க வீதி வீதியாக சென்று உள்ளனர். ஆனால் கூட வந்தவர்களும் வாக்கு செலுத்தவில்லை. அவர் குடும்பத்தினரும் வாக்கு செலுத்த வில்லை என்பது வியப்பாக உள்ளது.