செங்கல்பட்டு, ஜன.2- செங்கல்பட்டில் நடைபெற்று வரும் செங்கை புத்தகத் திருவிழாவில் இது வரையிலும் 5 ஆயிரம் பள்ளி மாணவர்கள் வருகை தந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம் இணைந்து செங்கை புத்தகத் திருவிழாவை கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி முதல் நடத்தி வரு கின்றனர். இதில் 50 அரங்குகளில் லட்சக் கணக்கான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவிற்கு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு செல்கின்றனர். இவர்கள் வந்து செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச பேருந்துகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும் மாணவ மாண வியருக்கு ஓவியம், பேச்சு போட்டி, கதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புத்தகத் திருவிழாவிற்கு வருகை தரும் பள்ளி மாணவர்களுக்கு நூறு ரூபாய்கான இலவச பரிசு கூப்பன் வழங் கப்படுகிறது. இந்த கூப்பனை பயன்படுத்தி மாணவர்கள் விரும்பிய நூல்களை வாங்கிக் கொள்ளலாம். இதுவரையிலும் 5 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் புத்த கத் திருவிழாவிற்கு வந்து சென்றுள்ளனர். நாள்தோறும் பள்ளி மாணவர்கள் வருகை தருவதால் காலை முதலே கலை நிகழ்ச்சி கள், வீதி நாடகங்கள் மாணவர்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் என புத்தகத் திரு விழா விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் புத்தகம் விற்பைனை நடைபெற்றிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தினந்தோறும் காலையில் நடைபெறும் கருத்தரங்களில் பிரபல பேச்சாளர்கள் கருத்துரை வழங்கி வருவதால் செங்கல் பட்டு மக்கள் மத்தியில் செங்கை புத்தகத் திருவிழா வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் மட்டுமே புத்தகத் திருவிழா நடைபெறும் என்பதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என புத்தகத்திரு விழா ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.