வேலூர், ஜூலை 10 - இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட முதல் சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையில் 1806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி நடந்தது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நடந்த இந்த புரட்சியில் ஏராளமான இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் நினை வாக வேலூர் கோட்டை அருகே உள்ள மக்கான் சந்திப்பில் சிப்பாய் புரட்சி நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி, வீரமரணமடைந்த வீரர்க ளுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 216-வது சிப்பாய் புரட்சி நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, வீரமரணமடைந்த வீரர்க ளுக்கு வீரவணக்கம், நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறறது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிப்பாய் புரட்சியில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் சுதந்திரபோராட்ட தியாகிகள், குடும்பத்தினர், முன்னாள் ராணுவ வீரர்கள், நேதாஜி படையில் பணிபுரிந்த வீரர்கள் மற்றும் குடும்பத்தினர், தேசிய மாணவர்கள் படை, சாரணர் இயக்கம், நாட்டுநலத்திட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.