districts

img

ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டுகோள்

வேலூர், மார்ச் 3- ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் கூறினார். வேலூர் மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் அலு வலகத்தில் ஆசிரியர்க ளுக்கு பாராட்டு விழா வியா ழனன்று (மார்ச் 3) நடை பெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கி சான்றிதழ்களை வழங்கி னார். பின்னர் அவர் பேசுகை யில், கொரோனா பொது முடக்க காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பினை ஏற்று பள்ளிக் கல்வித்துறையின் ஜூனியர் ரெட் கிராஸ் நாட்டு நலப்பணித் திட்டம் பாரத சாரண சாரணியர் மற்றும் தேசிய மாணவர் படையில் அங்கம் வகிக்கும் ஆசிரியப் பெருமக்கள் தன்னார்வமாக கலந்துகொண்டு பல்வேறு உதவிகளை செய்து இருக்  கிறார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். நாம் அனைவரும் முடிந்த வரை உதவிகளை செய்ய வேண்டும். நம்முடைய வாழ்நாளில் நாம் உதவிகள் செய்தோம் என்ற ஒரு பதிவு இருக்க வேண்டும். பள்ளியில் பயிலும் ஏழை மாண வர்களின் கல்வி நலனில் ஆசி ரியர்கள் அக்கறை கொண்டு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். மாவட்டத்தில் சிறந்த மாணவர்களை உரு வாக்க அவர்கள் கல்வி நலன் மேம்பட நாம் அனை வரும் இணைந்து செய லாற்றுவோம் என்றார். இந்த நிகழ்வில் 120 ஆசிரியருக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி கவுர விக்கப்பட்டனர். இதில் ஜூனி யர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ. நா.ஜனார்த்தனன், மாவட்ட பொருளாளர் க.குண சேகரன், பாரத சாரண சாரணியர் மாவட்டச் செய லாளர் அ.சிவக்குமார், தலைமை ஆசிரியர் டி.திரு நாவுக்கரசு, பள்ளி துணை ஆய்வாளர் அ.மணிவாசகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.