districts

காவலர்களை தாக்கி விட்டு  சிறார் குற்றவாளிகள் தப்பி ஓட்டம்

வேலூர். மார்ச் 28- வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காகிதப்பட்டறை பகுதியில் சமூக நலத்துறையின் சார்பில் நடத்தப்படும் சிறுவர்கள் இளம் சிறார்கள் (குற்றம் செய்தவர்கள்) பாதுகாப்பு இல்லம் உள்ளது. இங்கு 43 இளம் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு சென்னையை சேர்ந்த திருட்டு, கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 சிறார் குற்றவாளிகள் திங்களன்று (மார்ச் 27) பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கத்தியால் தாக்கியதில் பாதிக்கப்பட்ட குமரவேல் மேலும் சில பாதுகாவலர்களுடன் செவ்வாயன்று (மார்ச் 28) மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். அதில் பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. பாதுகாப்பான சூழலை உருவாக்கி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரியுள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு தான் ஒரு சிறார் குற்றவாளி தன்னை வேறு இல்லத்திற்கு மாற்றக் கூடாது என கூறி சுவற்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.