வேலூர், மார்ச் 14- நாடு முழுவதும் தலித் மக்கள் மீது அதிகரித்துக் கொண்டி ருக்கும் சாதி வெறி தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும், எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகாமல் முறையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் பி.காத்தவராயன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் எம். காசி, ராமமூர்த்தி எம்.பி. ராமச்சந்திரன், ஏ.கதிர் அகமது, பி.குணசேகரன் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.தயாநிதி துவக்கி வைத்தார். முன்னணி யின் மாநில துணை பொதுச் செயலாளர் ப.செல்வன் நிறைவு செய்து பேசினர். விசிக மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார், முன்னணியின் மாவட்டச் செயலாளர் வி.குபேந்திரன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, மாநகர தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சி.ஞானசேகரன், இந்திய குடியரசு கட்சி இராசி.தலித்குமார், திரா விடர் விடுதலை கழகம் சிவா, தமிழ் புலிகள் கட்சி ரஞ்சித், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சிட்டிபாபு, காப்பீட்டு கழக கோட்ட செயலாளர் எஸ்.ராமன், வழக்கறிஞர் மருதன் ஆகியோர் உரை யாற்றினர். குடியாத்தம் அடுத்த பரதராமி திருவள்ளுவர் நகர் அருந்ததியர் பகுதியில் தலித் கல்லூரி மாணவியை பாலியல் வன்மத்துடனும், சாதி ரீதியாகவும் இழிவுப் படுத்தி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்து வழக்கை விரை வாக நடத்த வேண்டும். திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் தலித் விரோத நடவடிக்கையாக, மூன்று தலைமுறையாக தூய்மைப் பணி செய்துக் கொண்டு வரும் தலித் மற்றும் அருந்ததிய மக்க ளின் வீடுகளை காலி செய்ய வேண்டுமென்று மிரட்டு வதை கைவிட்டு அதே இடத்தில் அந்த மக்களுக்கு பட்டா வழங்கி வீடு கட்டிதர வேண்டும். நாட்ராம்பள்ளி, வெள்ளை நாயக்கனேரி பகுதியில் தலித் மக்களின் சுடுகாட்டு பாதையை மறித்திருக்கும் சாதி ஆதிக்க சக்திகள் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தலித் மக்க ளுக்கு மாவட்ட நிர்வாகம் கொடுத்த எழுத்து பூர்வ மான உறுதிமொழியை நடைமுறைப்படுத்தி பாதை அமைத்து தர வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்திப் பேசினர்.