விருதுநகர்,ஜூன் 12- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டத்தால் புல்லலக் கோட்டை தலித் அருந்ததியர் மக்களின் வழிபாட்டு உரிமை மீட்கப்பட்டுள்ளது
விருதுநகர் மாவட்டம் புல்லலக் கோட்டை மற்றும் நந்தி ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களின் அருந்ததியர் மக்கள் வழிபடும் ஸ்ரீ பராசக்தி காளி யம்மன் கோவில் புல்லலக்கோட்டை யில் உள்ளது.
பல தலைமுறைகளாக இக்கோவில் திருவிழாவின் போது பொது வீதி வழியாக அவர்கள் மேளதாளத்துடன் ஊர்வலம் வருவது வழக்கம்.
அருந்ததியர் சமூகத்தில் பட்டதாரி கள் உருவாகி சமூகத்தில் முற்போக்கான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் தலித் அருந்த திய மக்கள் மற்றவர்களுக்கு செய்து வந்த இலவச உழைப்பை நிறுத்திக் கொண்டனர். சாவு சொல்லி செல்வது, பிணங்களை எரிப்பது, புதைப்பதற்கு குழி வெட்டுவது போன்றவைகளை 2019 ஆம் ஆண்டு முதல் நிறுத்திக் கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த இதர பிரிவு மக்களில் ஒரு பகுதியினர், அருந்ததியர் மக்களின் வழிபாட்டு உரிமையைத் தடுத்து வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முற்பட்டபோதும் தடுத்தனர்.
இந்த ஆண்டு அருந்ததியர் மக்கள் வைகாசி திருவிழாவை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.காவல்துறை யில் முறையாக அனுமதியும் கோரி யுள்ளனர். ஆனால் அக்கிராமத்தைச் சார்ந்த இதர பகுதி மக்கள் அருந்ததி யர்கள் பொதுத்தெரு வழியாக முளைப்பாரி மற்றும் கரகம் எடுத்துச் செல்வதற்கு காவல்துறையினரிடம் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர்.
பூசாரி மீது தாக்குதல்
மேலும் கோவில் பூசாரி சந்திரன் என்பவரைச் சாதியைச் சொல்லி இழிவு படுத்தி தாக்கியுள்ளனர்.
இப்பிரச்சனையில் அருந்ததியர் மக்களின் வழிபாட்டு உரிமைக்காக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யும், ஆதித்தமிழர் கட்சியும் தலையீடு செய்து வருகிறது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் 8.6.2024 அன்று கிராமத்திற்குச் சென்று பிரச்ச னை குறித்து ஆய்வு செய்துள்ளனர்.
கோவில் பூசாரி சந்திரனை தாக்கி யவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும்,அருந்ததியர் மக்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து பொது வீதிகள் வழியாக செல்வதற்கு பாது காப்பு வழங்கிட வேண்டும் எனவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் தலைவர்கள் அதிகாரிகளைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
இதன் அடிப்படையில் கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட அதி காரிகள் அருந்ததியர் மக்கள் வழிபடு வதையும், பொதுப்பாதை வழியாக முளைப்பாரி, பால்குடம் எடுத்துச் செல்வதையும் எவரும் தடை செய்யக் கூடாது என அறிவித்தனர்.
அதன்படி 12.06.24 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் அருந்ததியர் மக்கள் வழிபாடு செய்தனர்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி,மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.லட்சுமி, மாவட்ட தலைவர் எம்.முத்துக்குமார், செயலாளர் கே.முருகன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்துவேலு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தெய் வானை, செயலாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் நிகழ்வில் பங்கேற்ற னர்.