விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம் பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பெண்கள் உட்பட 11 பேர் காயம் - நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து தென்காசி நோக்கி சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து சென்றுள்ளது. அதேபோல் ராஜபாளையத்தில் இருந்து மதுரை நோக்கி லாரி சென்றுள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமியாபுரம் விளக்குப் பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பெண்கள் உட்பட 11 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம்பட்டி காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் டி.பண்ணப்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொத்த மலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை அணி 11இல் பணிபுரியக்கூடிய பயிற்சி காவலர் ராஜ்குமார், ராஜபாளையம் பண்டிட் சுப்பு ராஜா தெருவைச் சேர்ந்த பாலமுருகன், மனைவி லட்சுமி பிரியா, பட்டிவீரன்பட்டி சேர்ந்த விக்னேஷ் அவரது மனைவி கௌரி, அரசு பேருந்து ஓட்டுனர் தங்கபாண்டியன் ஆகிய நான்கு பேரின் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால். இவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.