districts

img

ஏழை மக்களுக்கு இலவச பட்டா கோரி சிபிஎம் போராட்டம்

சாத்தூர், பிப்.28- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் படந்தால் பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய  மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்தபட்டது. சாத்தூர் வருவாய் வட்டாட்சியார் அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு நகர்குழு உறுப்பினர் பாண்டியன் தலைமையேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் கே.விஜயகுமார் துவக்கி வைத்தார். நகர் செயலாளர் பி.பெத்தராஜ் விளக்கிப் பேசினார். முடிவில் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர்,  இலவச பட்டா வழங்குவதாக உறுதி அளித்தார்.

;