districts

img

ஆவியூர்:தீண்டாமை வன்கொடுமையை கண்டித்து ததீஒமு ஆர்ப்பாட்டம்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தொடரும் தீண்டாமை வன்கொடுமைகளை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.லட்சுமி தலைமையேற்றார்.  மாவட்ட செயலாளர் எம்.முருகன் துவக்கவுரையாற்றினார்.

கோரிக்கைகளை விளக்கி தமிழ்புலிகள் கட்சியின் விடியல்வீரப்பெருமாள், ஆதித் தமிழர் கட்சியின் விஸ்வைகுமார், ஆதித்தமிழர் பேரவையின் கவுதமன், பூவை ஈஸ்வரன், திராவிடர் தமிழர் கட்சியின் ஆதிவீரன் ஆகியோர் பேசினர். முடிவில் முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு கண்டன உரையாற்றினார். மேலும் இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஊர்காவலன், மாவட்ட பொருளாளர் எம்.சுப்புராம் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

இப்போராட்டத்தில் பட்டியலின மக்களை பாதுகாக்க வேண்டும். ஆவியூரில் தீண்டாமை கொடுமையில் ஈடுபடுவோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவியூரில் நடைபெறும் தீண்டாமைகள் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கோஷமிட்டனர்.