districts

img

விருதுநகரில் மின்னல் தாக்கி 4 பேர் பலி  

விருதுநகரில் மின்னல் தாக்கி கட்டட தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.  

விருதுநகர் மாவட்டம் கருப்பசாமி நகரில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா (22), ரோசல்பட்டியைச் சேர்ந்த ஜக்கம்மாள் (55), கார்த்திக் (28), முருகன் (24) ஆகியோர் கட்டுமானப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  

இந்நிலையில் அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென கட்டடத்தின் மாடியிலிருந்த 4 பேரும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

அதனைதொடர்ந்து பாண்டியன் நகர் போலீசார் விரைந்து வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

;