districts

img

பெண் குழந்தையை விற்ற தாய் உள்ளிட்ட 10 பேர் கைது 

விருதுநகரில் ஒரு வயது பெண் குழந்தையை விற்ற தாய் உள்ளிட்ட 10 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் செவல்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (25). கணவனை இழந்து இவர் தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.சில நாட்களுக்கு முன் கலைச்செல்வியின் குழந்தை காணவில்லை என கூறப்பட்டது.  இதையடுத்து அப்பகுதி மக்கள் அழித்த புகாரின் பேரில் சைல்டு லைன் 1098-க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அதையடுத்து விஏஓ சுப்புலட்சுமி மற்றும் சூலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலைச் செல்வியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது பெண் குழந்தையை ரூ.2.30 லட்சம் விலை பேசி ஒரு கும்பலிடம் விற்றதாக கலைச் செல்வி தெரிவித்துள்ளார். 
விசாரணையில், திருமண புரோக்கர்களாக இயங்கி வந்த கும்பல் ஒன்று குழந்தையை விலைக்கு வாங்கி மதுரையில் உள்ள குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு விற்றது தெரியவந்தது. மேலும் குழந்தை விற்பனையில் மதுரை, கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த பலர் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதையடுத்து மதுரைக்குச் விரைந்த தனிப்படை போலீசார் ஜெய்ஹிந்த் புரத்தில் இருந்த குழந்தையை மீட்டனர்.

இது குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாய் கலைச்செல்வி, குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதிகளான மதுரையைச் சேர்ந்த கருப்பசாமி, பிரியா, உள்ளிட்ட 10 பேரை இன்று அதிகாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து இரு சொகுசு கார்களையும் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.